இன்ற (13) காலை கொழும்பில் தொடங்கிய இந்த அமர்வு 15ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பிராந்திய சுகாதார தலைவர்கள் ஆரம்ப சுகாதார பராமரிப்பு ஆரோக்கியமான வயோதிப வாழ்க்கை மற்றும் புகையிலை பாவனைக்கு எதிரான போராட்டம் ஆகிய முக்கிய சுகாதார விடயங்களைப் பற்றிய கலந்துரையாடல்களில் ஈடுபடுவர்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எட்டு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் இரண்டு நாடுகளின் தூதர்கள் மற்றும் WHO நிபுணர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு வரவிருக்கும் ஆண்டிற்கான பிராந்திய சுகாதார திட்டங்களை உருவாக்குவர்.

இந்நிகழ்வின் முக்கிய நோக்கம் பொதுமக்களின் சுகாதார பிரச்சினைகளை ஆராய்ந்து கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற முன்னேற்றங்களை மதிப்பாய்வு செய்து அனைத்து மக்களுக்கும் ஆரோக்கியமான வாழ்வாதாரத்தை வழங்கும் நடைமுறைத் திட்டங்களை முன்னேற்றுவதாகும்.

தொடக்க விழாவில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன WHO இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் WHO தென்கிழக்கு ஆசியா பிராந்திய அலுவலக இயக்குநர் டாக்டர் கேத்தரின் போஹ்மே மற்றும் சுகாதார செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க உரையாற்றினர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading