பிரான்ஸில் Deliveroo, Uber Eats மீது மனிதக் கடத்தல் குற்றச்சாட்டு

பிரான்ஸில் உணவு டெலிவரி சேவைகள் வழங்கும் Deliveroo மற்றும் Uber Eats நிறுவனங்களுக்கு எதிராக மனிதக் கடத்தல் குற்றச்சாட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

2026 ஏப்ரல் 22ஆம் தேதி டெலிவரி பணியாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நான்கு அமைப்புகள் இந்த புகாரை பாரிஸ் வழக்கறிஞரிடம் பதிவு செய்துள்ளன.

இந்த புகாரில் பெரும்பாலும் சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாத குடியேறிகள் வேலை செய்யும் நிலையில் அவர்கள் குறைந்த சம்பளத்தில் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்படுகிறார்கள் என்றும் வேலை பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆய்வுகள் காட்டுவதாவது டெலிவரி தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரியாக 60 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தாலும் அவர்கள் பெறும் சம்பளம் குறைந்தபட்ச ஊதியத்தைக் காட்டிலும் மிகவும் குறைவாக உள்ளது.

இந்த நிலைமை “கிக்இகானமி” (gig economy) முறை தொழிலாளர்களை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளுகிறது என விமர்சிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக Deliveroo மற்றும் Uber Eats நிறுவனங்கள் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளன.

இந்த வழக்கு பிரான்ஸில் டிஜிட்டல் தள வேலைவாய்ப்பு முறைகள் மீது அதிகமான சட்ட ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading