ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய கமிஷன் (European Commission) அமைப்பு ஐரோப்பாவில் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் மனிதக் கடத்தல் வலையமைப்புகளை உடைக்க புதிய €16.5 மில்லியன் நிதி திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2026 மே 21 முதல் விண்ணப்பங்களுக்கு திறக்கப்பட்டுள்ளதுடன் 2026 செப்டம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்
இந்த நிதி திட்டத்தின் மூலம் காவல்துறை சட்ட அமலாக்க அமைப்புகள், சமூக அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை இணைந்து செயல்படும் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
- சர்வதேச குற்றவியல் வலையமைப்புகள் பற்றிய உளவுத்தகவல் சேகரிப்பு
- எல்லை தாண்டிய விசாரணைகள்
- பணமோசடி மற்றும் சட்டவிரோத சொத்து கண்காணிப்பு
- மனிதக் கடத்தல் குழுக்களை முறியடித்தல்
- குற்றவியல் குழுக்கள் சட்டபூர்வ வணிகங்களில் ஊடுருவுவதை தடுக்கும் நடவடிக்கைகள்
போன்ற துறைகள் முன்னுரிமையாகக் கொள்ளப்படுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் தகவலின்படி போதைப்பொருள் கடத்தல் தற்போது ஐரோப்பாவில் மிக அதிக லாபம் தரும் குற்றங்களில் ஒன்றாக உள்ளது. அதேவேளை மனிதக் கடத்தல் உலகில் இரண்டாவது பெரிய சட்டவிரோத பொருளாதாரமாக கருதப்படுகின்றது. ஆண்டுதோறும் சுமார் 10,000 பேர் ஐரோப்பிய ஒன்றியத்தில் மனிதக் கடத்தலின் பாதிப்புக்குள்ளாகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி, EU Internal Security Strategy (ProtectEU), EU Drugs Strategy மற்றும் EMPACT போன்ற ஐரோப்பிய பாதுகாப்பு திட்டங்களின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. சமீபத்தில் 19 ஐரோப்பிய நாடுகள் இணைந்து நடத்திய EMPACT நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பல சட்டவிரோத வணிகங்கள் போதைப்பொருட்கள் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





Leave a Reply