ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) புதிய குடியேற்றக் கொள்கை திட்டத்தை ஐரோப்பிய ஆணையம் (European Commission) வியாழக்கிழமை வெளியிட்டது.

இதில் சட்டவிரோதமாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழையும் குடியேற்றங்களை அவர்களது சொந்த நாடுகளுக்கு விரைவாகவும் திறம்படவும் திருப்பி அனுப்புவது “அவசர முன்னுரிமை” என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு யார் வரலாம் என்பதை ஐரோப்பாவே தீர்மானிக்கும் என்ற அடிப்படை கொள்கையை மையமாகக் கொண்டு செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

குடியேற்ற ஆணையர் மேக்னஸ் புருன்னர் சட்டவிரோத வருகைகளின் எண்ணிக்கையை குறைப்பதும், குறைந்த நிலையில் தொடர்ந்து வைத்திருப்பதும் தான் எங்களின் முக்கிய இலக்கு என தெரிவித்தார்.

மேலும் குடியேற்ற முறையில் நடைபெறும் தவறான பயன்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கிறது. அதனால் உண்மையில் பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு உதவுவதும் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை ஈர்ப்பதும் பாதிக்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் சட்டவிரோத குடியேற்ற வருகைகள் 25 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்திருந்தாலும் குடியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து அதிகமாக உள்ளது.

இதன் பின்னணியில் 27 உறுப்புநாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு குடியேற்றம் மற்றும் அகதி கொள்கையில் “புதிய அத்தியாயம்” தொடங்கப்படுவதாக புருன்னர் உறுதியளித்தார்.

Leave a Reply

Contact NS (Nerikkalam.Info)

வணக்கம்
உங்களுடைய அவசர தேவை கருதி நீங்கள் நிரோஷ் சந்துருவை தொடர்புகொள்ள விரும்புகிறீர்கள்,

Nirosh_Santhuru

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading