ஷெங்கன் பகுதி திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தேவை, ஐரோப்பிய ஆணையம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் European Commission ஷெங்கன் பகுதி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதுடன் எதிர்கால சவால்களை சமாளிக்க புதிய எல்லை பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தாரை திருப்பி அனுப்பும் (Return) நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான “State of Schengen” அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ல் சட்டவிரோத எல்லைக் கடத்தல்கள் 26% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவில் தங்க உரிமை இல்லாதவர்களை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பும் விகிதம் 28% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமான Return Rate என கூறப்படுகிறது.
அதேவேளை 2026 ஏப்ரல் முதல் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள Entry/Exit System (EES) மூலம், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லை கண்காணிப்பு மேலும் டிஜிட்டல் முறையில் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
முதல் 6 மாதங்களில் மட்டும் 66 மில்லியனுக்கும் அதிகமான நுழைவு மற்றும் வெளியேறும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதுடன் EU-க்கு நுழைய அனுமதி இல்லாத 32,000 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.













Leave a Reply