Tag: Europe Migration
அகதி கடத்தல் கும்பல், பால்கன் நாடுகள் வழியாக சட்டவிரோதமாக அகதிகளை மேற்கு ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றதாக சந்தேகிக்கப்படும் சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலை கிரேக்க அதிகாரிகள் தலைமையில் Europol ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். கிரேக்கம், பல்கேரியா, ருமேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் நடத்தப்பட்டதில் மொத்தம் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் கிரேக்கத்தில், ஒருவர் பல்கேரியாவில் மற்றும் ஒருவர் நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின்படி […]
Migrant Return, ஸ்பெயினின் கனாரி தீவுகளில் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய புகலிடம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் கீழ் முதல் பெரியளவிலான புகலிடக் கோரிக்கையாளர் திருப்பி அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மனித உரிமைகள் மற்றும் நடைமுறை அமலாக்கம் தொடர்பாக புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. தகவல்களின்படி குறைந்த அளவிலான புகலிட அங்கீகார விகிதம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சிலர் விரைவுபடுத்தப்பட்ட எல்லை நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு அவர்களை மீண்டும் தாய்நாடு அல்லது பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்கு அனுப்பும் […]
UK migrant returns, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இடையே சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஒருவரை திருப்பி அனுப்பினால் ஒருவரை சட்டப்பூர்வமாக ஏற்கும் ஒப்பந்தத்தின் முதல் மாதத்தில் எந்தப் புலம்பெயர்ந்தோரும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னரும் சிறிய படகுகள் மூலம் பிரிட்டனை அடையும் புலம்பெயர்ந்தோர் வருகை தொடர்ந்து இடம்பெற்றதாகவும் ஆனால் முதல் மாத காலப்பகுதியில் ஒப்பந்தத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட மீள அனுப்பும் நடவடிக்கைகள் […]
Schengen Border Checksஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரான்ஸ் உட்பட 9 ஷெங்கன் நாடுகளுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள உள்நாட்டு எல்லை சோதனைகளை (Internal Border Checks) படிப்படியாக நிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. புதிய Entry/Exit System (EES) மற்றும் எதிர்வரும் ETIAS பயண அனுமதி முறைமைகள் மூலம் வெளிப்புற எல்லை பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளதால் ஷெங்கன் பிராந்தியத்தின் சுதந்திரமான பயணத்தை பாதிக்கும் உள்நாட்டு எல்லை கட்டுப்பாடுகளின் தேவையும் குறைந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, டென்மார்க், […]
Immigration Newsஐரோப்பிய ஒன்றியம் (EU) சட்டவிரோத குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் Return Hubs (திரும்ப அனுப்பும் மையங்கள்) என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் நாடு விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட குடியேற்றிகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள மூன்றாம் நாடுகளில் அமைக்கப்படும் சிறப்பு மையங்களுக்கு அனுப்பப்படலாம். அங்கு அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படும் வரை தங்க வைக்கப்படுவார்கள். தற்போதைய நிலையில் இந்தத் திட்டம் குறித்து […]
Migrant Workersஇத்தாலியின் தெற்குப் பகுதியான கலாப்ரியா (Calabria) பிராந்தியத்தில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பாகிஸ்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு வாகனத்திற்குள் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Amendolara பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் அருகே எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வாகனத்திற்குள் நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விசாரணையில் இரண்டு பேர் வாகனத்தின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டி எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்ததாக கண்காணிப்பு காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து […]
ஷெங்கன் பகுதி திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தேவை, ஐரோப்பிய ஆணையம் ஐரோப்பிய ஒன்றியத்தின் European Commission ஷெங்கன் பகுதி தொடர்ந்து நிலைத்தன்மையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளதுடன் எதிர்கால சவால்களை சமாளிக்க புதிய எல்லை பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தாரை திருப்பி அனுப்பும் (Return) நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான “State of Schengen” அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025-ல் சட்டவிரோத எல்லைக் கடத்தல்கள் 26% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவில் […]
ஐரோப்பிய யூனியன் குடியேற்ற ஆணையர் மெக்னஸ் பிருன்னர் இத்தாலி மற்றும் அல்பேனியா இடையே 2023 ஆம் ஆண்டு கையெழுத்தான குடியேற்ற ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடியேற்ற மற்றும் அகதி விதிகளுக்குள் வருவதாக உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அல்பேனியா பயணம் மேற்கொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டார். இந்த ஒப்பந்தத்தின் படி மத்தியதரைக் கடலில் இத்தாலி கடற்படையால் மீட்கப்படும் சில சட்டவிரோத குடியேற்றக்காரர்கள் அல்பேனியாவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களுக்கு அனுப்பப்படுவர். அந்த முகாம்கள் அல்பேனியாவில் இருந்தாலும், அவை முழுமையாக […]