Schengen Border Checks
ஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரான்ஸ் உட்பட 9 ஷெங்கன் நாடுகளுக்கு, தற்போது நடைமுறையில் உள்ள உள்நாட்டு எல்லை சோதனைகளை (Internal Border Checks) படிப்படியாக நிறுத்துமாறு பரிந்துரைத்துள்ளது. புதிய Entry/Exit System (EES) மற்றும் எதிர்வரும் ETIAS பயண அனுமதி முறைமைகள் மூலம் வெளிப்புற எல்லை பாதுகாப்பு வலுப்பெற்றுள்ளதால் ஷெங்கன் பிராந்தியத்தின் சுதந்திரமான பயணத்தை பாதிக்கும் உள்நாட்டு எல்லை கட்டுப்பாடுகளின் தேவையும் குறைந்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து, நோர்வே, ஸ்லோவேனியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் தற்போது சில அல்லது அனைத்து அண்டை ஷெங்கன் நாடுகளுடனும் எல்லை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் 2024 நவம்பரில் இந்த சோதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்தியதுடன் அவை தற்போது குறைந்தபட்சம் 2026 நவம்பர் 1 வரை நீடிக்கும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளன. Schengen Border Checks
ஐரோப்பிய ஆணையத்தின் கருத்துப்படி, EES முறைமை மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியிலிருந்து வரும் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் தகவல்கள் தானியங்கியாக பதிவு செய்யப்படுவதால் பாதுகாப்பு மேம்படும். இதனால் நாடுகள் எல்லைச் சோதனைகளுக்கு பதிலாக காவல்துறை கண்காணிப்பு மொபைல் பயோமெட்ரிக் அடையாளச் சோதனை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு போன்ற மாற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பயன்படுத்தலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply