சுவிட்சர்லாந் தில் மக்கள் தொகையை 1 கோடி (10 மில்லியன்) பேராக மட்டுப்படுத்தும் முன்மொழிவை வாக்காளர்கள் தேசிய வாக்கெடுப்பில் நிராகரித்துள்ளனர். வலதுசாரி அரசியல் கட்சியான Swiss People’s Party முன்வைத்த இந்தத் திட்டம் 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் நிரந்தர குடியிருப்பு மக்கள் தொகை 1 கோடியை தாண்டக்கூடாது என்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது.
ஆரம்ப முடிவுகளின்படி சுமார் 54% முதல் 55% வரையிலான வாக்காளர்கள் இந்த முன்மொழிவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். தற்போது சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை சுமார் 9.1 மில்லியனாக உள்ள நிலையில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக குடியேற்றம் இருப்பதாக ஆதரவாளர்கள் வாதிட்டனர்.
ஆனால் சுவிட்சர்லாந் அரசு, வணிக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டம் பொருளாதார வளர்ச்சிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள சுதந்திரமான மக்கள் நடமாட்ட ஒப்பந்தத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தன. குறிப்பாக சுகாதாரம் போக்குவரத்து மற்றும் பல தொழில்துறைகள் வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிதும் சார்ந்துள்ளதால் வாக்காளர்கள் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் ஐரோப்பிய உறவுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளனர்.





Leave a Reply