சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை, வெளிநாட்டவருக்கு அனுமதி இல்லை

சுவிட்சர்லாந்தில் மக்கள் தொகை “10 மில்லியன் மக்கள் வரம்பு” (No 10 million Switzerland) என்ற முக்கிய அரசியல் முன்மொழிவு தற்போது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முன்மொழிவு நாட்டின் மக்கள் தொகையை 2050 ஆம் ஆண்டுக்கு முன் 10 மில்லியனை (1 கோடி) மீறாத அளவில் கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக் கோருகிறது. இதை வலதுசாரி Swiss People’s Party (SVP) முன்வைத்துள்ளது.

இதன் நோக்கம் அதிகரித்து வரும் குடியேற்றம் (immigration) மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியால் வீட்டு வசதி குறைவு வாடகை உயர்வு போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிப்படை வசதிகளின் அழுத்தம் போன்ற பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதாகும்.

#சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை 9.5 மில்லியனை எட்டும் போது அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். மேலும், 10 மில்லியன் வரம்பை மீறினால் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள “மக்கள் சுதந்திரச் சஞ்சாரம்” (Free Movement Agreement) ஒப்பந்தத்தையும் நிறுத்த வேண்டிய நிலை உருவாகலாம்.

இந்த முன்மொழிவு அரசியல் ரீதியாக மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவாளர்கள் மக்கள் அதிகரிப்பு நாட்டின் வாழ்க்கைத் தரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என கூறுகின்றனர்.

அதே நேரத்தில் எதிர்ப்பாளர்கள் இது பொருளாதாரத்திற்கும் வேலை வாய்ப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் என எச்சரிக்கின்றனர்.

மேலும் சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி சுமார் 52% மக்கள் இந்த முன்மொழிவுக்கு ஆதரவாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான முன்மொழிவை சுவிட்சர்லாந்து மக்கள் 2026 ஜூன் 14 அன்று வாக்கெடுப்பில் தீர்மானிக்க உள்ளனர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading