சுவிட்சர்லாந்தில் குடியேற்ற எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைபெற உள்ள பொதுச்சட்ட வாக்கெடுப்புக்கு அந்த நாட்டின் அரசு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள இந்த முன்மொழிவு நாட்டின் மொத்த மக்கள்தொகையை 2050க்குள் 1 கோடியாக (10 மில்லியன்) கட்டுப்படுத்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது. தற்போதைய மக்கள்தொகை சுமார் 9.1 மில்லியன் ஆக இருப்பதுடன், அதில் சுமார் 27% பேர் வெளிநாட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல தகவல்களுக்கு நமது பிரத்தியோக செய்தி தளத்தினை நாடுங்கள்
குடியேற்ற கட்டுப்பாடு, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் மக்கள்தொகை 9.5 மில்லியனை கடந்தவுடன் குடியேற்றம் தஞ்சம் கோருதல் மற்றும் குடும்ப இணைப்பு போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
மேலும், 10 மில்லியனை எட்டிய பின்னரும் நிலைமை கட்டுப்பாட்டில் வராவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள சுதந்திர நகர்வு ஒப்பந்தங்களை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது அவற்றிலிருந்து விலகவோ அரசு கட்டாயப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
ஆனால் சுவிட்சர்லாந்து அரசு மற்றும் பல தொழில் நிறுவனங்கள் இந்த முன்மொழிவை கடுமையாக எதிர்க்கின்றன. இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும் வெளிநாட்டு திறமையான பணியாளர்கள் குறைவதால் வேலைவாய்ப்பு மற்றும் சேவைத் துறைகள் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் உள்ள முக்கிய ஒப்பந்தங்களுக்கும் இது பாதிப்பு ஏற்படுத்தும் அபாயம் உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து நாடு முழுவதும் கடும் விவாதம் நிலவி வரும் நிலையில், வரவிருக்கும் வாக்கெடுப்பு முடிவு சுவிட்சர்லாந்தின் குடியேற்றக் கொள்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.































