பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸுக்கு இந்த ஆண்டு தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வந்துள்ளது. மாநாட்டில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ ஆகியோரும் கலந்துகொள்கின்றனர்.
மாநாட்டின் சர்வதேச முக்கியத்துவம்
ஈரான் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அந்தத் தடைகளுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானுக்கு ரஷ்யா உதவுவதாக அமெரிக்காவும் சில மத்திய கிழக்கு நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் தலைவர்கள் ஒரே மாநாட்டில் பங்கேற்பது கவனம் பெற்றுள்ளது.
ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டதால் எண்ணெய் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் மாநாட்டின் முக்கிய பின்னணியாக உள்ளது. இதற்கிடையில் இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. ரஷ்யா–உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான நகர்வுகளும் விவாதிக்கப்படக்கூடிய அம்சமாக உள்ளன.
2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜி ஜின்பிங் இந்தியா வருவது, இருதரப்பு உறவில் முன்னேற்றத்துக்கான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு பல்வேறு உலகச் சூழல்களுக்கு மத்தியில் BRICS summit in New Delhi நடைபெறுகிறது.





























