இந்தக் கப்பல் வெளிநாட்டுக் கொடியுடன் இயக்கப்பட்டதாகவும், Beihai Shipbuilding Co. கப்பல் கட்டும் தளத்தில் பராமரிப்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டபோது கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர். அவர்களில் 12 பேர் எந்தச் சிரமமும் இன்றி வெளியேற்றப்பட்டனர். மேலும் ஐந்து பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவு
இந்தச் சம்பவம் குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங், அனைத்து பகுதிகளும் தொடர்புடைய துறைகளும் இந்த நிகழ்விலிருந்து ஆழமான பாடங்களைப் பெற வேண்டும் எனக் கூறினார். தீ பாதுகாப்பு தொடர்பான அனைத்து ஆபத்துகளையும் முழுமையாக ஆய்வு செய்து சரிசெய்யவும் அவர் உத்தரவிட்டார்.
மேலும், Qingdao cargo ship fire சம்பவத்துக்கு உரிய முறையில் பதிலளித்து, காரணங்களை விரைவாகக் கண்டறிந்து, பொறுப்புக்குரியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிபர் அறிவுறுத்தினார்.
2026ஆம் ஆண்டில் சீனாவில் பல தீவிர தொழில்துறை விபத்துகள் நடந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் கப்பல் கட்டும் தளத்தில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.































