சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

கனடா அரசு, குடும்பங்கள் ஒன்றாக இருக்கவும் கியூபெக்கின் தொழிலாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும் புதிய குடியேற்ற சலுகையை அறிவித்துள்ளது.

2026 ஜூன் 5 முதல் கியூபெக்கின் Skilled Worker Selection Program (Programme de sélection des travailleurs qualifiés) கீழ் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் தகுதி பெற்றால் அவர்களின் கணவர் மனைவி அல்லது பொதுச்சட்ட துணையும் கனடாவில் Open Work Permit பெற விண்ணப்பிக்க முடியும்.

இதன்மூலம் கியூபெக்கில் நிரந்தர குடியுரிமை நோக்கி செல்லும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் துணைகளுக்கு திறந்த வேலை அனுமதி வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. குடும்பங்கள் பிரியாமல் ஒன்றாக வாழ்வதுடன் துணைகளும் கனடாவில் எந்த நிறுவனத்திலும் சட்டபூர்வமாக வேலை செய்ய வாய்ப்பு பெறுகின்றனர். இந்த நடவடிக்கை கியூபெக்கில் திறமையான பணியாளர்களை தக்கவைத்துக்கொள்ளவும் வேலைவாய்ப்பு பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவும் என கனடா அரசு தெரிவித்துள்ளது. இந்த தற்காலிக கொள்கை 2026 ஆம் ஆண்டு இறுதி வரை நடைமுறையில் இருக்கும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading