33,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை, கனடா புதிய அறிவிப்பு
கனடா அரசு தனது குடியேற்ற (Immigration) முறையை சமநிலைப்படுத்தி, குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை (labour shortage) குறைக்க புதிய முக்கிய நடவடிக்கையை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் கனடாவில் ஏற்கனவே வேலை செய்து வரும் சுமார் 33,000 வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residence) பெறும் செயல்முறை விரைவுபடுத்தப்பட உள்ளது.
இந்த திட்டம் 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட “In-Canada Workers Initiative” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கம் ஏற்கனவே கனடாவில் வாழ்ந்து வேலை செய்து சமூகத்திற்கு பங்களிப்பு செய்து வரும் தற்காலிக வேலை அனுமதி கொண்ட தொழிலாளர்களை விரைவாக நிரந்தர குடியுரிமையாளர்களாக மாற்றுவதாகும்.
அரசு கூறுவதாவது இந்த 33,000 இடங்கள் 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் கட்டாயமாக வழங்கப்படும்.
இதில் முக்கியமாக கனடாவின் சிறிய நகரங்கள் கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!
WhatsApp / Call: +94 76 572 9042
தகுதியானவர்கள் பொதுவாக கீழ்கண்ட திட்டங்கள் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்திருக்க வேண்டும்
- Provincial Nominee Program (PNP)
- Atlantic Immigration Program
- Community immigration pilots
- Caregiver programs
- Agri-Food pilot திட்டங்கள்
மேலும் அவர்கள் குறைந்தது 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறிய சமூகங்களில் வசித்து வேலை செய்து இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
இந்த நடவடிக்கையின் மூலம் கனடா அரசு கூறுவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்களுக்கு நிலைத்தன்மை (stability) வழங்கப்படுவதாகும்.
மேலும் சிறிய நகரங்களில் உள்ள வேலை வாய்ப்புகள் நிரப்பப்பட்டு அந்த பகுதிகளின் பொருளாதாரம் வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
அரசு மேலும் தெரிவித்ததாவது இந்த திட்டம் கனடாவில் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை குறைத்து நீண்ட காலமாக நாட்டில் பங்களிக்கும் மக்களுக்கு நிரந்தர வாய்ப்பு வழங்கும் ஒரு பெரிய குடியேற்ற மாற்றத்தின் பகுதியாகும்.
இந்த திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கனடாவில் நிரந்தரமாக வாழும் வாய்ப்பைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.













Leave a Reply