ஜோ ரூட் மீண்டும் கேப்டன் என்ற அறிவிப்பு இங்கிலாந்து கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அணித்தலைவர் ஜோ ரூட் இடைக்கால கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் ஸ்டோக்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குத் தேர்வு செய்யப்படவில்லை. இதனையடுத்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளது.
2017 முதல் 2022 வரை இங்கிலாந்து அணியை வழிநடத்திய அனுபவமிக்க வீரரான ஜோ ரூட் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். ஜோ ரூட் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது அணிக்கு நிலைத்தன்மையையும் அனுபவத்தையும் வழங்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அதேவேளை ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோர்டன் காக்ஸ் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டில் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி ஜூன் 17ஆம் திகதி ஓவல் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் தொடரை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கவுள்ளது.
ஸ்டோக்ஸ் தொடர்பான விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில் அவர் எதிர்காலத்தில் மீண்டும் அணிக்குத் திரும்ப வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் ஜோ ரூட் மீண்டும் கேப்டன் ஆக பொறுப்பேற்றிருப்பது இங்கிலாந்து அணியின் முக்கிய செய்தியாக மாறியுள்ளது.





Leave a Reply