உலக கிரிக்கெட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் லோர்ட்ஸ் மைதானம் தற்போது ICC-யின் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பயன்படுத்தப்பட்ட லோர்ட்ஸ் மைதான ஆடுகளம் திருப்திகரமற்றதாக மதிப்பிடப்பட்டதையடுத்து அந்த மைதானத்திற்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
போட்டியின் போது ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு அதிகளவில் சாதகமாக இருந்ததாகவும், ஒழுங்கற்ற பவுன்ஸ் மற்றும் அதிக சீம் நகர்வு காணப்பட்டதாகவும் போட்டி நடுவரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் துடுப்பாட்ட வீரர்கள் சீராக விளையாட முடியாத நிலை ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போட்டி நான்காவது நாளிலேயே நிறைவடைந்ததுடன் ஆரம்ப நாட்களிலேயே அதிகளவிலான விக்கெட்டுகள் வீழ்ந்தமை ஆடுகளத்தின் தரம் குறித்த கேள்விகளை எழுப்பியது. போட்டி சமநிலையான ஆட்டத்தை வழங்கத் தவறியதாக ICC கருதியுள்ளது.
இந்த லோர்ட்ஸ் மைதான ஆடுகளம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
ICC விதிமுறைகளின் படி திருப்திகரமற்றது என வகைப்படுத்தப்படும் ஆடுகளங்களுக்கு ஒரு டிமெரிட் புள்ளி வழங்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டிமெரிட் புள்ளிகள் சேர்க்கப்படும் பட்சத்தில் அந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான தடை விதிக்கப்படலாம்.
கிரிக்கெட்டின் அடையாள மைதானமாகக் கருதப்படும் லோர்ட்ஸுக்கு இவ்வாறு கண்டனம் வழங்கப்பட்டிருப்பது சர்வதேச கிரிக்கெட் வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.





Leave a Reply