இந்த முறை, எல்லைச் சோதனைகளை நம்பகமாக்கவும், சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்நாட்டு பாதுகாப்பை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ளது.
EES முறை 2026 ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் அனைத்து விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட வெளிப்புற எல்லைச் சோதனை மையங்களில் முழுமையாக செயல்படும்.
இந்த முறை ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஷெங்கன் பகுதி நாடுகளின் குடிமக்கள், அதேபோல் அன்டோரா, மோனாக்கோ, சான் மரினோ, வத்திக்கான் குடிமக்களுக்கு பொருந்தாது.
EES முறையில் பயணிகளின் பெயர், பாஸ்போர்ட் எண், நுழைவு மற்றும் வெளியேறு தேதி, நேரம், இடம், நுழைவு மறுப்பு காரணம் போன்ற விவரங்களுடன் முகப்படம் மற்றும் விரலடையாளம் போன்ற உயிரணு (Biometric) தகவல்களும் பதிவு செய்யப்படும். பயணிகள் விரலடையாளம் மற்றும் முகபடம் அளிக்க மறுத்தால், அவர்களுக்கு ஷெங்கன் பகுதி நுழைவு மறுக்கப்படும். தரவுகள் கடைசி எல்லை கடத்தல் தேதி முதல் 3 ஆண்டுகள் வரை சேமிக்கப்படும் அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி தங்கியிருந்தால் 5 ஆண்டுகள் வரை சேமிக்கப்படும்.
முதல் முறையாக ஷெங்கன் பகுதி எல்லையை கடக்கும் பயணிகள் தங்களது முழு தகவல்களையும் வழங்கி டிஜிட்டல் கோப்பை உருவாக்குவார்கள். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் விரைவாக அடையாளம் சரிபார்த்துக்கொண்டு நுழைவு அல்லது வெளியேறு விவரங்களை மட்டுமே புதுப்பிப்பார்கள். 25 முக்கிய விமான நிலையங்கள், துறைமுகங்கள், ரயில் நிலையங்களில் இலவச கியோஸ்க்கள் மற்றும் டேப்லெட்கள் மூலம் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
2026 ஏப்ரல் 10 முதல் பாஸ்போர்ட்டில் முத்திரை இடும் பழைய முறை நிறுத்தப்பட்டு, EES முறையிலேயே அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் பதிவுகளும் மேற்கொள்ளப்படும். இந்த புதிய முறை பாதுகாப்பை அதிகரித்து, சட்டவிரோத தங்குதலை தடுக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.



























