ஐரோப்பிய ஒன்றியம் ஒரே பயணம் – ஒரே டிக்கெட் திட்டத்தை EU முன்மொழிவு
ஐரோப்பிய ஒன்றியம் (EU) நாடுகளுக்கு இடையிலான ரயில் பயணத்தை எளிதாக்க புதிய விதிமுறைகளை முன்மொழிந்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பல நாடுகள் மற்றும் பல்வேறு ரயில் நிறுவனங்களை இணைக்கும் பயணங்களுக்கும் “ஒரே டிக்கெட்” மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகமாகலாம். தற்போது பல பயணிகள் cross-border train travel செய்யும்போது வெவ்வேறு இணையதளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்த வேண்டிய சிரமம் உள்ளது.
புதிய EU திட்டம் இந்த சிக்கலை குறைத்து, பயணிகளை ரயில் பயணத்துக்கு அதிகமாக ஈர்க்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவின் கீழ் பெரிய ரயில் நிறுவனங்கள் போட்டியாளர்களின் டிக்கெட்டுகளையும் தங்களது இணையதளங்களில் காட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால் ஐரோப்பிய ஒன்றியம் பயணிகள் ஒரே இடத்தில் பல்வேறு ரயில் சேவைகளை ஒப்பிட்டு முன்பதிவு செய்ய முடியும். மேலும் பயணத்தின் போது ஒரு இணைப்பு ரயிலை தவறவிட்டால் கூட பயணிகளுக்கு முழுமையான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று EU தெரிவித்துள்ளது.
EU போக்குவரத்து ஆணையர் Apostolos Tzitzikostas கூறுகையில் ஐரோப்பாவில் சுதந்திரமான பயணம் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று. இப்போது அதை மேலும் எளிதாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டம் விமானப் பயணத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு நட்பான ரயில் பயணத்திற்கு மக்களை மாற்ற உதவும் என்றும் EU நம்புகிறது.
ஆனால் சில ரயில் நிறுவனங்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக போட்டியாளர்களின் டிக்கெட்டுகளை கட்டாயமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற விதி அதிக கட்டுப்பாடாக இருப்பதாகவும் இதனால் டிக்கெட் விலைகள் உயரக்கூடும் என்றும் European rail operators சங்கம் எச்சரித்துள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் தற்போது ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் EU உறுப்புநாடுகளின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளன. அங்கீகாரம் கிடைத்தால் அடுத்த சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Leave a Reply