Germany Payment Card for Asylum Seekers
திட்டத்திற்கு எதிராக ஜெர்மனியில் சமூக நல அமைப்புகள் மற்றும் மனித உரிமை குழுக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. அகதிகள் பெறும் உதவித்தொகையை நேரடி பணமாக வழங்காமல் குறிப்பிட்ட கடைகள் மற்றும் சேவைகளில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய கார்டு மூலம் வழங்கும் இந்த முறை அகதிகளின் தினசரி வாழ்க்கையை சிரமப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
AWO உள்ளிட்ட அமைப்புகள் இந்த Payment Card திட்டம் பணம் எடுத்தல் மற்றும் பண பரிமாற்றங்களில் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதால் அகதிகளின் சமூக வாழ்க்கை மற்றும் சுயாதீனத்தை பாதிக்கிறது என தெரிவித்துள்ளன. மேலும் சில நீதிமன்ற தீர்ப்புகளிலும் இந்த கட்டுப்பாடுகள் சட்டரீதியாக சந்தேகத்திற்கு உட்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





Leave a Reply