ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் மையமாக கொண்டு பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று உலகளாவிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் (WHO) இதனை “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொதுச் சுகாதார அவசரநிலை” என அறிவித்துள்ளது. குறிப்பாக Bundibugyo வகை எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வருவதுடன் இதுவரை 131 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 500-க்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களும் இந்த வைரஸ் பரவலுக்கு உட்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன அதில் ஒருவர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஜெர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது காங்கோவில் சிகிச்சை மையங்கள் அவசரமாக அமைக்கப்பட்டு வருவதுடன் தடுப்பூசி மற்றும் சிகிச்சை மருந்துகள் இல்லாத இந்த வகை வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் கவலையில் உள்ளன. WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் “இந்த பரவலின் வேகமும் அளவும் மிகவும் கவலைக்குரியது” என எச்சரித்துள்ளார்.





Leave a Reply