பிரிட்டனின் UK Health Security Agency (UKHSA) நிறுவனம் MV Hondius கப்பலுடன் தொடர்புடைய Andes Hantavirus பரவல் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பரவல் சம்பவத்தில் பல நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில மரணங்களும் பதிவாகியுள்ளன. தற்போது பிரிட்டன் அரசு NHS WHO மற்றும் உள்ளூர் சுகாதார அமைப்புகள் இணைந்து தீவிர கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த கப்பலில் இருந்த பிரிட்டிஷ் பயணிகள் பலர் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு Arrowe Park Hospital-ல் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். UKHSA தகவலின்படி சிலர் தற்போது வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து சுகாதார பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட தகவலின்படி இதுவரை பல உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கப்படும் Andes Hantavirus நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்த வைரஸ் சாதாரணமாக எலிகள் மூலம் பரவுவது வழக்கம் என்றாலும் Andes வகை மனிதர்களுக்கிடையிலும் குறைந்த அளவில் பரவக்கூடியது என்பதால் உலக சுகாதார அமைப்புகள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றன.
சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உடனடி பெரிய ஆபத்து இல்லை என தெரிவித்துள்ளார்கள். எனினும் காய்ச்சல் சுவாச சிரமம் உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply