பயணத்தின் போது சிலர் காய்ச்சல், சுவாச சிரமம் போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமை குறித்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு தொடர்புடைய பயணிகள் மற்றும் பணியாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மனிதர்களுக்கிடையே ஹண்டா வைரஸ் பரவுவது அரிதானதாக இருந்தாலும், இது உறுதிப்படுத்தப்பட்டால் பொது சுகாதாரத்திற்கு புதிய சவாலாக அமையும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கப்பலில் பரவியிருக்கக்கூடிய ஆபத்தான ஹண்டா வைரஸ் WHO எச்சரிக்கை
உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி ஒரு கப்பல் பயணத்தின் போது பயணிகளுக்கிடையே ஹண்டா வைரஸ் (Hantavirus) பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வைரஸ் பொதுவாக எலி போன்ற உயிரினங்களின் மூலம் மனிதர்களுக்கு பரவுவது வழக்கம் என்றாலும் இந்தச் சம்பவத்தில் மனிதர்களுக்கிடையே பரவியிருக்கக்கூடும் என்ற சாத்தியம் ஆராயப்படுகிறது.

































