செய்தியின் படி தென் அத்திலாந்திக் கடலில் பயணித்த டச்சு சொகுசு கப்பல் MV Hondius இல் ஏற்பட்ட ஹாண்டா வைரஸ் பரவலுடன் தொடர்புடைய மேலும் ஒன்பது பிரிட்டிஷ் குடிமக்கள் முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்காக இங்கிலாந்துக்கு கொண்டு வரப்படுகின்றனர்.
UK Health Security Agency (UKHSA) தெரிவித்ததாவது இவர்கள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றி இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. இதற்கு முன் அந்தக் கப்பலில் இருந்து வந்த சிலர் 45 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்தனர் அவர்களில் ஆறு பேர் மருத்துவ பரிசோதனைகளில் எதிர்மறை முடிவுகள் வந்ததால் வீட்டிலேயே தனிமைப்படுத்தலைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை அசென்ஷன் தீவில் பாதிக்கப்பட்டவரை சிகிச்சையளித்த ஒரு மருத்துவர் அறிகுறிகள் தென்பட்டதால் லண்டனிலுள்ள சிறப்பு தொற்று நோய் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஹாண்டா வைரஸ் பொதுவாக எலிகள் மூலம் பரவுகிறது மனிதர்களுக்கு இடையேயான பரவல் மிகவும் அரிது என உலக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் பரவலுடன் தொடர்பாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு ஆபத்து மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





Leave a Reply