கனடாவில் ஹன்டா வைரஸ் கண்காணிப்பு தீவிரம் 4 பேர் தனிமைப்படுத்தல்
கனடா பொதுச் சுகாதார நிறுவனம் (PHAC) வெளியிட்ட புதிய தகவலின்படி MV Hondius கப்பல் தொடர்பான Andes Hantavirus பரவல் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு கனடிய பயணிகள் தற்போது பிரிட்டிஷ் கொலம்பியாவில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மே 10, 2026 அன்று கனடாவுக்கு திரும்பிய இந்த பயணிகள் அனைவரும் தற்போது அறிகுறிகள் இன்றியே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வைரஸ் தென் அமெரிக்காவில் காணப்படும் அரிய வகை Hantavirus ஆகும். பொதுவாக எலிகள் போன்ற உயிரினங்களின் கழிவுகள் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் மிகவும் அரிதாக மனிதர்களிடையிலும் பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதுவரை MV Hondius கப்பல் சம்பவத்துடன் தொடர்பாக பல நாடுகளில் மொத்தம் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 3 மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடா அரசு வெளியிட்ட அறிக்கையில் தற்போதைக்கு பொதுமக்களுக்கு ஆபத்து மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் Winnipeg தேசிய நுண்ணுயிரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.





Leave a Reply