ஆப்பிரிக்க நாடான Democratic Republic of the Congoவில் புதிய எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை குறைந்தது 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இடுரி மாகாணத்தின் மொங்க்வாலு மற்றும் ருவாம்பாரா பகுதிகளில் நூற்றுக்கணக்கான சந்தேக நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பரவல் அரிய வகையான “Bundibugyo” எபோலா வைரஸால் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அண்டை நாடான Ugandaவிலும் தொற்று பரவியிருப்பதால் உலக சுகாதார அமைப்பு சர்வதேச பொதுச் சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. பாதுகாப்பு சிக்கல்கள் ஆயுதக் குழு செயல்பாடுகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கான மருத்துவ அணுகல் குறைபாடு காரணமாக நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக சவால்களை சந்தித்து வருகின்றன. நோய்த்தொற்று உடல் திரவங்கள் மூலம் பரவுவதால் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





Leave a Reply