இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Airavat என்ற போர்க்கப்பல்,செயற்பாட்டு தேவைகளுக்காக கடந்த ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் வருகையின்போது இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய கடற்படை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் தரையிறக்கும் போர் கப்பல்களில் ஒன்றான INS Airavat செயற்பாட்டு திருப்புமுனை (Operational Turnaround) நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஐ.பி. பட்டீல் செயற்பட்டு வருகிறார்.
இந்த விஜயத்தின் போது இந்திய கடற்படை பணியாளர்கள் மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையில் தொழில்முறை அனுபவப் பரிமாற்ற நிகழ்வுகள் நட்புறவை வலுப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் பல்வேறு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. மேலும் கப்பலின் பணியாளர்கள் இலங்கையின் முக்கிய வரலாற்று மற்றும் சுற்றுலா தளங்களையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடல்சார் ஒத்துழைப்பையும் பாதுகாப்பு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படுகிறது.













Leave a Reply