Tag: maritime security
சவுதி கடல்சார் பாதுகாப்பு கூட்டணி, சிவப்பு கடல் மற்றும் பாப் அல் மந்தப் (Bab el-Mandeb) கடற்பாதைகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கில் சவுதி அரேபியா தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள பன்னாட்டு கடல்சார் பாதுகாப்பு கூட்டணியில் தற்போது 43 நாடுகள் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரியாத்தில் நடைபெற்ற உயர்மட்ட இராணுவ ஆலோசனைக் கூட்டத்தில் பல நாடுகளின் இராணுவத் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டு கடல்சார் பாதுகாப்பு, சர்வதேச வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது […]
Saudi oil attack, ஜேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் முக்கியமான கச்சா எண்ணெய் விநியோக மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக அறிவித்துள்ளனர். ஹூதி இராணுவ பேச்சாளர் யஹ்யா சாரி வெளியிட்ட அறிக்கையில் கிழக்கு சவுதியை செங்கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான யன்பு துறைமுகத்துடன் இணைக்கும் பல முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை யேமன் வான்வெளியில் சவுதி அரேபியா மேற்கொண்டதாக கூறப்படும் […]
Iran Israel Conflict, ஈரான் இஸ்ரேல் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதன் தாக்கம் தற்போது செங்கடல் (Red Sea) பிராந்தியத்திற்கும் விரிவடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை காஸ்பியன் கடல் (Caspian Sea) பிராந்தியத்தில் நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில் செங்கடல் வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகப் பாதைகள் மீது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகளாவிய எரிசக்தி விநியோகம் […]
ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி தாய்லாந்து கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை குறிவைத்ததாக ஈரானின் அரசுக்கு நெருக்கமான Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த கப்பல் IRGC வழங்கிய எச்சரிக்கைகளை புறக்கணித்து அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளோ அல்லது கப்பல் நிறுவனமோ உடனடி […]
ஹோர்முஸ் நீரிணையின் தெற்கு கடற்பாதையில் ஒமான் கடல் எல்லைக்குள் பயணித்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சொந்தமான ‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பாஹியா’ (Al Bahiyah) என்ற இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் பணியாற்றிய இந்தியக் குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச […]
ஹோர்முஸ் ஜலசந்தியின் தெற்கு கடற்பாதை வழியாகச் சென்றபோது இரண்டு எண்ணெய்க் கப்பல்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக இங்கிலாந்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் கண்காணிப்பு மையமான (UKMTO) இன்று உறுதிப்படுத்தியுள்ளது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் இரண்டு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மிக அருகில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் குறித்து நேற்று முதன்முதலாக தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களின் பெயர்கள் அல்லது அவற்றை குறிவைத்த தரப்பு குறித்து UKMTO எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதேவேளை ஹோர்முஸ் நீரிணையின் தென்பகுதியில் […]
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒரே அடிப்படை நிபந்தனைகள் ஈரானின் இறையாண்மை மற்றும் உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுவதுடன் ஈரான்–அமெரிக்கா இடையிலான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதாகும் என ஈரானிய ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் முகமது அக்ரமினியா தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய மூலோபாய கடற்பாதையில் ஈரானின் உரிமைகளைப் பாதுகாப்பதில் எந்தவித பின்னடைவுமில்லை என்றும் நாட்டின் பாதுகாப்பு […]
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச வர்த்தகக் கப்பல்கள் மீது எந்தவிதத் தாக்குதலும் நடத்தப்படாது என்று ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட தகவல்களில் தெஹ்ரானின் அதிகார மையங்களுக்குள் நிலவும் உள்நாட்டு அதிகாரப் போட்டிகள் அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் நிறுத்தப் புரிந்துணர்வை எட்டுவதையும் அது நடைமுறையில் நீடிப்பதையும் சிக்கலாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போர் நிறுத்தத்தை சீர்குலைக்க […]
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை இரவு குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக இரண்டு அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு வர்த்தகக் கப்பல்கள் கணிசமான சேதமடைந்ததாகவும் எனினும் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஓமானின் லிமா கடற்பகுதிக்குக் கிழக்கே தெற்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஒரு எண்ணெய்க் கப்பல் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத […]
யேமன் நாட்டின் செங்கடல் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த வணிகச் சரக்குக் கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய நபர்களால் திடீரெனத் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரித்தானிய கடற்படையின் கீழ் செயல்படும் யுனைடெட் கிங்டம் மெரிடைம் ட்ரேட் ஆபரேஷன்ஸ் (UKMTO) அமைப்பு இன்று (05) உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் பிரதான துறைமுக நகரமான ஹொடைடாவிற்கு தென்மேற்கே சுமார் 30 கடல் மைல் (55 கிலோமீட்டர்) தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு […]