அரசின் நிலைப்பாடு
2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு தலைமையிலான அரசு தோல்வியடைந்து கவிழ்ந்தால், அரசியலமைப்பின் 12ஆவது பிரிவைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிபர் இமானுவேல் மக்ரோனுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.
இந்த அதிகாரத்தை மக்ரோன் ஏற்கனவே 2024 ஜூன் 9ஆம் தேதி, ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் பயன்படுத்தியிருந்தார். எனினும், தற்போதைய சூழலில் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சாத்தியம் எலிசே மாளிகை தரப்பில் திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அரசின் செய்தித் தொடர்பாளர் மாட் பிரெஜோன், “இது எங்களுடைய திட்டமிடல்களில் இல்லை” என்று தெரிவித்தார்.
France Assembly dissolution நடைமுறைக்கு வந்தால், 2027 அதிபர் தேர்தலுக்கு முன் அரசியல் கட்சிகள் தங்களின் அதிபர் தேர்தல் பிரசாரத்தை ஒதுக்கி, புதிய நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் அந்தப் புதிய நாடாளுமன்றத்துடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும். அரசியலமைப்பின்படி, மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டும்.































