விளவூர்க்கல் பொற்றா பகுதியைச் சேர்ந்த அபிஜித் மருத்துவப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி கிறிஸ்டி. இந்த தம்பதிக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவானா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது.
குழந்தையை மீட்க முயன்றும் பலனில்லை
நேற்று அபிஜித் பணிக்குச் சென்றிருந்தபோது, வீட்டில் கிறிஸ்டி, குழந்தை இவானா மற்றும் உறவினர்கள் நேசம்மா, ஜெசிந்தா ஆகியோர் இருந்தனர். கிறிஸ்டியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் உறவினர்கள் அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கு குழந்தை ரத்தக் காயங்களுடன் கிடந்தது.
அக்கம் பக்கத்தினர் குழந்தையை மலையின்கீழ் தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டபோதும், குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.
Kerala mother kills one-year-old daughter சம்பவம் தொடர்பாக மலையின்கீழ் போலீசார் விசாரணை நடத்தினர். கணவன்-மனைவி இடையிலான தொடர் குடும்பப் பிரச்சினையே காரணம் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தங்களின் நான்காவது திருமண நாளில் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்ததாக கிறிஸ்டி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. அவர் அதிக அளவு தூக்க மாத்திரைகளை உட்கொண்டிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
கணவர் தன்னை தனிமைப்படுத்தியதாகவும், கணவரின் குடும்பத்தினர் சந்தேகத்துடன் பார்த்ததாகவும், சொந்த வீட்டுக்குச் செல்லவும் விருப்பமான உணவைச் சமைக்கவும் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




























