இரு அமைப்புகளும் வெளியிட்ட கூட்டு அறிக்கையின்படி, இந்த ஒப்பந்தம் கூட்டு ஆய்வுகள், திறன் மேம்பாடு, அறிவுப் பரிமாற்றம், கொள்கை உரையாடல்கள், வெளியீடுகள் மற்றும் மாநாடுகளுக்கு வழிவகுக்கும். இளம் ஆய்வாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும்.
இலங்கையுடனான பல்கலைக்கழக உறவு வலுப்படும்
இலங்கையில் செயல்படும் சுயாதீன ஆய்வு சிந்தனைக் குழுவுடன் தெற்காசிய பல்கலைக்கழகம் கையெழுத்திட்ட முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவாகும். இந்த கூட்டாண்மை, இலங்கையுடனான பல்கலைக்கழகத்தின் உறவை வலுப்படுத்தும் என அதன் தலைவர் பேராசிரியர் கே.கே. அகர்வால் தெரிவித்தார்.
மேலும், சார்க் அமைப்பின் நோக்கங்களை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த ஒத்துழைப்பு ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறினார். ஆய்வு மற்றும் கொள்கை உரையாடலில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை இந்த ஒப்பந்தம் வழங்கும் என RCSS நிறைவேற்றுப் பணிப்பாளர் தூதுவர் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.
SAU RCSS MOU அறிமுக நிகழ்வு இணையவழியில் நடைபெற்றது. இதில் டெல்லியில் உள்ள தெற்காசிய பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளும் கொழும்பில் உள்ள RCSS பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த ஒப்பந்தம் தெற்காசிய பிராந்தியத்தில் அறிவு பரிமாற்றத்திற்கும் கல்வி தொடர்புகளுக்கும் புதிய வாய்ப்பை உருவாக்குகிறது.






























