ஹோர்முஸ் நீரிணையில் அனுமதியின்றி நுழைந்ததாகக் கூறி தாய்லாந்து கொடியுடன் பயணித்த ஒரு சரக்கு கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) கடற்படை குறிவைத்ததாக ஈரானின் அரசுக்கு நெருக்கமான Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த கப்பல் IRGC வழங்கிய எச்சரிக்கைகளை புறக்கணித்து அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழைய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கப்பல் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தாய்லாந்து அதிகாரிகளோ அல்லது கப்பல் நிறுவனமோ உடனடி அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. மேலும் கப்பலுக்கு ஏற்பட்ட சேதம் அல்லது பணியாளர்களின் நிலை தொடர்பான தகவல்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் உலகின் முக்கிய எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இந்த புதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகம் தொடர்பாக மேலும் கவலைகள் எழுந்துள்ளன.













Leave a Reply