அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சரக்கு கப்பல் மீது IRGC தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது அண்மைய நாட்களில் அமெரிக்கா மேற்கொண்ட மூன்றாவது முக்கிய தாக்குதலாகும்.
இந்த தாக்குதலில் ஈரானின் கடற்கரை பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணை தளங்கள் மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட சில கடற்படை இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேதத்தின் முழுமையான விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இதற்கிடையில், ஈரான் பல வளைகுடா நாடுகளின் திசையில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக இரு தரப்பும் கடுமையான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலை மேலும் பதற்றமடைந்துள்ளது.
































