சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

ஈரானுடைய IRGC செயற்பாடு உலக பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்.

ஈரான் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ் (Strait of Hormuz) பகுதியில் கைப்பற்றிய இரண்டு வர்த்தக கப்பல்களை தனது துறைமுகமான பந்தர் அப்பாஸ் நோக்கி கொண்டு சென்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த கப்பல்களில் சுமார் 40 பேர் கொண்ட குழுவினர் உள்ளதாகவும் அவர்கள் மொண்டேநேக்ரோ, குரோஷியா, உக்ரைன் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனங்களால் இயக்கப்பட்டவை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் கடுமையான பதற்றத்தின் பின்னணியில் இடம்பெற்றுள்ளது. கடல் வழி போக்குவரத்து பாதுகாப்பு குறித்து உலக நாடுகள் கவலை வெளியிட்டு கடற்படையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ஈரானுடைய IRGC, ஈரான் துறைமுகங்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு பதிலாக இந்த கப்பல்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.

முக்கியமான எண்ணெய் கடத்தல் பாதையாக இருக்கும் இந்த ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ் பகுதியில் நிலவும் பதற்றம் காரணமாக உலக எரிசக்தி சந்தைகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்