இதனால் சுவிட்சர்லாந் து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் முதல் முறையாக அகதி விண்ணப்பம் பதிவு செய்யப்பட்ட நாடாக இருந்தாலும், விண்ணப்பதாரர்களை இத்தாலிக்கு திருப்பி அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய ஐரோப்பிய ஒன்றிய குடியேற்ற மற்றும் அகதி ஒப்பந்தத்தின் (EU Migration Pact) பின்னணியில் இத்தாலி தனது நிலைப்பாட்டை மாற்றியூ தெரிவித்துள்ளது.
முதல் மாற்றங்கள் புதிய ஒப்பந்தம் முழுமையாக செயல்படத் தொடங்கிய பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1,200-க்கும் அதிகமான டப்ளின் வழக்குகள் மீண்டும் இத்தாலிக்கு மாற்றப்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
(Solidarity) அமைப்பின் கீழ் வெளிப்புற எல்லை நாடுகளான இத்தாலி போன்ற நாடுகளின் மீது ஏற்படும் குடியேற்ற அழுத்தத்தை குறைக்க மற்ற நாடுகள் அகதிகளை ஏற்கவோ நிதி உதவி வழங்கவோ அல்லது பணியாளர்களை அனுப்பி உதவவோ முடியும். சுவிட்சர்லாந்தும் இந்த அமைப்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் நடைமுறையில் எத்தனை பேரை இத்தாலி ஏற்கும், மாற்றங்கள் எவ்வளவு வேகமாக நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.


























