ஹோர்முஸ் நீரிணையில் ஈரான் படகுகளை சுட்டு அழிக்க அமெரிக்க படைக்கு அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹோர்முஸ் பகுதியில் கடல்சார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானிய சிறிய படகுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக கடல் வழிச்சாலையில் குண்டுகள் (மைன்கள்) அமைக்கும் எந்த படகையும் தயக்கம் இல்லாமல் “சுட்டு அழிக்க” வேண்டும் என்று அவர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
ட்ரம்ப் வெளியிட்ட இந்த உத்தரவு உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள சூழலில் வெளியாகியுள்ளது. அமெரிக்கா தற்போது அந்தப் பகுதியில் மைன் அகற்றும் நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதுடன் அவற்றை மூன்றரை மடங்கு உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் இந்த நடவடிக்கை சர்வதேச கடல் போக்குவரத்து மற்றும் உலக எண்ணெய் சந்தைகளில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





Leave a Reply