Iran–United States இடையேயான மோதல் தீவிரமடைந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்டு புதிய பதற்றம் உருவாகியுள்ளது. அமெரிக்க அதிபர் Donald Trump தலைமையில் ஈரான் துறைமுகங்கள் மற்றும் கப்பல்களுக்கு எதிராக கடல் தடுப்பு (blockade) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் அல்லது திருப்பி அனுப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது . இதற்கு பதிலளித்த ஈரான் நீரிணையில் தன் கட்டுப்பாடு நிலவுகிறது என எச்சரித்து தங்களது வழிகாட்டுதலுக்கு உட்படாத கப்பல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது .
இதற்கிடையில் கப்பல்கள் மீது தாக்குதல் ஏவுகணை மற்றும் ட்ரோன் மோதல்கள் ஆகியவை அதிகரித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன . ஹோர்முஸ் நீரிணை உலக எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாக இருப்பதால் இந்த மோதல் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கக்கூடியதாக பார்க்கப்படுகிறது. போர்நிறுத்தம் பற்றிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் இரு தரப்பினரிடையே நம்பிக்கை குறைவால் நிலைமை இன்னும் பதற்றமாகவே நீடிக்கிறது.









Leave a Reply