சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Sri Lanka News, திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு உரிய முறையில் மருந்து வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

குறித்த காணொளியில் 2026 ஜூன் 26 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் 11.20 மணி வரை நோயாளி காத்திருக்கச் சொல்லப்பட்டதுடன் 97 சிராஜ் நகர் மக்களுக்கு மருந்து வழங்க முடியாது என தெரிவித்து மருந்து வழங்க மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் சமூக ஊடகங்களில் நடவடிக்கை கோரி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு பிரதேச செயலாளருக்கும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். Sri Lanka News

மேலும், பொது சுகாதார நிறுவனங்கள் பொறுப்புடனும் வெளிப்படைத்தன்மையுடனும் மக்களின் நலனை முன்னிறுத்தியும் செயல்பட வேண்டும் என்றும் அலட்சியம் அல்லது தவறு உறுதிப்படுத்தப்பட்டால் தேவையான நடவடிக்கைகள் தாமதமின்றி எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை விசாரணை சுமூகமாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்