இலங்கையில் இளைஞர் வேலைஇல்லா விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாக குறைந்துள்ளதாக துணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசின் வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அவரின் கூற்றுப்படி தொழிற்பயிற்சி, திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் தனியார் துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு முயற்சிகள் காரணமாக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதன் மூலம் பலர் தொழில்துறையிலும் சேவைத் துறையிலும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இளைஞர்களின் திறன்களை சர்வதேச வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் வேலைஇல்லா விகிதத்தை மேலும் குறைப்பதே அரசின் இலக்காக இருப்பதாகவும் துணை அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும் தரமான மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இன்னும் முக்கிய சவாலாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.









Leave a Reply