சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2025 கடந்த 19 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

தேசிய தொழில்முனைவோர் அபிவிருத்தி அதிகார சபை (NEDA) இலங்கை தேசிய வர்த்தக சபையுடன் இணைந்து ஏற்பாடு செய்த மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2025 தொடர்ந்து 8 வது முறையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் மேல் மாகாணத்தில் செயல்படும் நுண் சிறு நடுத்தர மற்றும் பெரிய அளவிலான தொழில்முனைவோர் மத்தியில் சிறந்த தொழில்முனைவோர் சாதனைகளை வெளிப்படுத்திய 54 தொழில்முனைவோருக்கு 27 விருது பிரிவுகளின் கீழ் தங்கம் வெள்ளி வெண்கலம் மற்றும் கௌரவ விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு தொழில் மற்றும் உற்பத்தித் துறை விவசாயம்/கால்நடை மற்றும் மீன்வளம், விருந்தோம்பல்/சுற்றுலா மற்றும் பிற சேவைகள் புதுமை சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, எரிசக்தி திறன் ஏற்றுமதி சிறப்பு உற்பத்தித்திறன் மதிப்பு கூட்டல் இளைஞர் மற்றும் பெண்கள் தொழில்முனைவோர் பன்முகத் திறன் தொழில்முனைவோர் வேலை உருவாக்கம் நிலைத்தன்மை நடைமுறைகள் மற்றும் நிதி செயல்திறன் ஆகியவற்றிற்காக விசேட விருதுகளும் வழங்கப்பட்டன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading