அமெரிக்கா, ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மத்திய கிழக்கு பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான பிரச்சினை உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. உலகின் சுமார் 20% எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கடத்தப்படும் முக்கிய கடற்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் அங்கு செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலளித்த அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump, “ஈரான் உடனடியாக நீரிணையை திறக்க வேண்டும் இல்லையெனில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். சீன அதிபர் Xi Jinping கூட ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும் என ஒப்புக்கொண்டதாக டிரம்ப் தெரிவித்தார். அதேவேளை ஈரான் அதிபர் Masoud Pezeshkian “நாடு மிகக் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது” என்று ஒப்புக்கொண்டுள்ளார்.
லெபனானில் ஹெஸ்பொல்லா மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்களும் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் காசா மற்றும் லெபனான் பகுதிகளில் பலர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலக சந்தைகளில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்து பாதிப்பு காரணமாக பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதற்கிடையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமாதான பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் நடுவராக செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





Leave a Reply