அதிகாரிகளின் தகவலின்படி 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அந்த குடியிருப்பு போதைப்பொருள் சேமிப்பு மையமாக (“nourrice”) பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. சோதனையில் 32 கிலோ கஞ்சா பல ஆயுதங்கள் தோட்டாக்கள் மற்றும் சுமார் 20,000 யூரோ பணம் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சமூக வீட்டு வாடகை ஒப்பந்தம் நீதிமன்ற உத்தரவின் மூலம் ரத்து செய்யப்பட்டு 2026 ஜூன் 16 அன்று குடும்பம் வெளியேற்றப்பட்டது.
வால் தொய்ஸ் மாகாணத்தில் 2023 முதல் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடுமையான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சமூக வீடுகளில் இருந்து குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. France Crime News
இந்த சம்பவம் அத்தகைய 28வது வெளியேற்ற நடவடிக்கையாக பதிவாகியுள்ளது. அதிகாரிகள் மீட்கப்பட்ட சமூக வீடு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள மற்றொரு குடும்பத்திற்கு ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.



























