பிரான்ஸ் செய்தி
தென் பிரான்சின் Hérault River ஆற்றில் நீரோட்டத்தில் சிக்கிய தனது மகளை காப்பாற்ற முயன்ற தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 14 அன்று Tressan பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் சுமார் 10 வயதுடைய சிறுமி பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகளை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்த தந்தையும் பின்னர் தாயாரும் நீரில் சிக்கிய நிலையில் அவசர மீட்புப் படையினர் தாய் மற்றும் மகளை கிளைகளில் பற்றிக்கொண்டு இருந்த இடத்தில் இருந்து மீட்டனர்.
ஆனால் தந்தை நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு பின்னர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு இதயத் தாக்கமும் ஏற்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் செய்தி, இந்த ஆற்றுப் பகுதியில் நீந்த வேண்டாம் என்று எச்சரிக்கை பலகைகள் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்ததாகவும் குறிப்பாக Hérault ஆற்றின் சில பகுதிகளில் ஆபத்தான அடிநீர் ஓட்டங்கள் இருப்பதாகவும் அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர். சமீபத்திய வெப்ப அலை காரணமாக மக்கள் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் அதிகமாகச் செல்லும் நிலையில், பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.





Leave a Reply