Tag: Sri Lanka Navy
Sri Lanka News,தங்காலை மாவெல்ல கடற்பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட 19 வயது இளைஞரின் உடல் இரண்டு நாட்களுக்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தங்காலை கோடெல்லவெல பகுதியைச் சேர்ந்த சமிது தில்ஷான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 9ஆம் திகதி மாவெல்ல மகாகல்கவ கடற்கரையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் கடல் அலையில் சிக்கி குறித்த இளைஞர் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக அதிகாரப்பூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதுடன் விசாரணைகளுக்காக அவர் எதிர்வரும் ஜூலை 27 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. நீண்டகாலமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு கவனத்தை ஈர்த்துள்ள இந்த வழக்கு, […]
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் வடமராட்சி கடற்பரப்பில் காணாமல் போன இரு மீனவர்கள் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டதாக கூறப்படும் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரவிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். புதன்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றிய அவர் காணாமல் போன மீனவர்களின் பெயர்கள் அவர்கள் காணாமல் போன திகதி மற்றும் அதன்பின் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கோரினார். மேலும், ஆளும் தரப்பு […]
தயா தர்மபிரிய அவர்களுக்கு இலங்கை கடலோர காவல்படையினால் சிறப்பு கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. கடலோர காவல்படையின் முதல் பணிப்பாளர் நாயகமாக (Director General) பணியாற்றிய அவர் அந்த அமைப்பின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை கடலோர காவல்படை உருவாக்கப்பட்ட ஆரம்ப காலங்களில் அதன் நிர்வாக கட்டமைப்பு, செயல்பாட்டு திட்டங்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதில் அவர் முக்கிய பங்காற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் காரணமாக கடலோர […]
அமெரிக்க கப்பல் இலங்கை கடற்படையில் நேற்றையதினம் (4ம் திகதி) உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளமை நாட்டின் கடல்சார் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க கடலோரக் காவல்படையில் சேவையாற்றிய USCGC Decisive கப்பல் தற்போது இலங்கை கடற்படையின் P628 என்ற பெயரில் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க கப்பல் இணைக்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயம் (EEZ) மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 மீட்டர் […]
இந்திய கடற்படைக்கு சொந்தமான INS Airavat என்ற போர்க்கப்பல்,செயற்பாட்டு தேவைகளுக்காக கடந்த ஜூன் 1 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கப்பல் வருகையின்போது இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய கடற்படை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய கடற்படையின் தரையிறக்கும் போர் கப்பல்களில் ஒன்றான INS Airavat செயற்பாட்டு திருப்புமுனை (Operational Turnaround) நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளது. கப்பலின் கட்டளை அதிகாரியாக கமாண்டர் ஐ.பி. பட்டீல் செயற்பட்டு வருகிறார். இந்த விஜயத்தின் போது […]
யாழ்ப்பாணத்தின் கடல் கடந்த தீவுப் பகுதிகளில் ஒன்றான அனலைதீவு மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று கடற்படையின் சிறப்பு படகின் மூலம் அனலைதீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் வழியாக தீவுக்கு அனுப்பப்பட்ட இந்த பேருந்து இனிமேல் அனலைதீவு பகுதிக்குள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் இதன் மூலம் அங்குள்ள மக்களின் நாளாந்த பயண நடவடிக்கைகள் மேலும் இலகுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் […]