சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் பிரதேச மக்கள், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு மற்றும் இலங்கை கடற்படையினர் இணைந்து உடனடியாக தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். எனினும் மோசமான கடல் நிலைமை காரணமாக ஆரம்ப கட்ட தேடுதல்களில் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.Sri Lanka News
இந்நிலையில் நேற்று (11) மாவெல்ல கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்த மீனவர்கள் கடலில் மிதந்து கொண்டிருந்த உடலை அவதானித்து அதனை படகு மூலம் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் மரணம் தொடர்பான விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்




























