Tag: police investigation
Easter Sunday attacks charges, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி சணிவிரத்ன மற்றும் முன்னாள் குற்றப் புலனாய்வுத் துறை (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோருக்கு எதிராக மேலும் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு ஈஸ்டர் […]
இம்ரானின் நிதிப் பொறுப்பாளர் கைது, மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க கௌசல்யா எனப்படும் ‘ரத்மலானே சைமா’ பாதாள உலகக் குற்றவாளி கஞ்சிபானி இம்ரானின் நிதிப் பொறுப்பாளராக நீண்டகாலமாக செயல்பட்டிருந்தமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இலங்கை மற்றும் மலேசிய காவல்துறையினர் இணைந்து முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது சைமா உட்பட மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளில் கஞ்சிபானி இம்ரானின் அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் சைமாவே கையாள்ந்ததுடன் அவரது சமூக ஊடக நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்திருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் […]
உடற் சிகிச்சை நிபுணர் கொலை, நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும் இருவர் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (30) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். விளக்கமறியலில் உள்ளவர்கள் நாரம்மல […]
Matara Fire, மாத்தறை – காலி பிரதான வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முன்பாக அமைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இன்று (29) பிற்பகல் திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் கடை முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது. தீ வேகமாக பரவியதால் கடைக்குள் இருந்த பெருமளவிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் வர்த்தக உபகரணங்கள் அனைத்தும் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் அருகிலிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு […]
Pentota Parasailing, பெந்தோட்டை கடற்கரைக்கு அருகே பராசெய்லிங் சாகச சுற்றுலா நடவடிக்கையின்போது ஏற்பட்ட விபத்தில் 31 வயதுடைய பாலஸ்தீன பெண் சுற்றுலாப் பயணி உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் இன்று (29) மாலை இடம்பெற்றதாக பெந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி பெந்தோட்டை கடற்கரை வீதியை மையமாகக் கொண்டு இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட பராசெய்லிங் சேவையின் போது பறந்துகொண்டிருந்த பராசெய்ல் திடீரென கடலுக்குள் விழுந்துள்ளது. இதில் பயணியாக இருந்த பாலஸ்தீன பெண் உயிரிழந்ததுடன் பராசெய்லை […]
கம்பளை கொலை, – கீரபனை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (28) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கீரபனை பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான தகவலை அடுத்து கம்பளை காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் படுகாயமடைந்த நபர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. […]
கான்ஸ்டபிள் உயிரிழப்பு, வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் இன்று (29) அதிகாலை பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் பேராதனையைச் சேர்ந்த 28 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் தனது T-56 தாக்குதல் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படுகாயமடைந்த அவர் உடனடியாக பாணத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட […]
மட்டக்களப்பு வாள்வெட்டு, ஏறாவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் போது வழங்கப்பட்ட அன்னதானத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட தகராறு வாள்வெட்டு தாக்குதலாக மாறியதில் பெண்கள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அன்னதான உணவின் தரம் குறித்து இளைஞர் ஒருவர் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர் ஏழு பேர் கொண்ட குழுவொன்று வாள்களுடன் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின் போது […]
வவுனியாவில் சோகம், கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் இடம்பெற்ற துயரகரமான விபத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலின் தடி திடீரென முறிந்து கீழே சரிந்துள்ளது. அப்போது ஊஞ்சலில் தாயுடன் இருந்த 5 மாதக் குழந்தையின் மீது தடி விழுந்ததால் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் குழந்தையின் தாயாரின் […]
Toronto shootings, கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் நகர மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டொராண்டோவில் யூதர்களுக்கு சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகமான X தளத்தில் கருத்து வெளியிட்ட மேயர் […]