Toronto shootings, கனடாவின் டொராண்டோ நகரில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் நகர மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டொராண்டோவில் யூதர்களுக்கு சொந்தமான இரண்டு வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் தொடர்பாக சமூக ஊடகமான X தளத்தில் கருத்து வெளியிட்ட மேயர் இவ்வாறான வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் டொராண்டோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் சேதப்படுத்தும் சம்பவங்களால் நான் மிகவும் அதிருப்தியடைந்துள்ளேன். அனைத்து சம்பவங்களிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் முழுமையான தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். சம்பவங்களின் பின்னணி மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நகரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Toronto shootings













Leave a Reply