Africa News,ஜிம்பாப்வே தேசிய கால்பந்து அணியின் முன்னணி வீரர் டிவைன் லுங்கா தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்த நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்ப தகவல்களின் படி அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தென்னாப்பிரிக்க காவல்துறை தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் தாக்குதலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கால்பந்து உலகில் முக்கிய வீரராக விளங்கும் அவருக்கு எதிராக நடைபெற்ற இந்த தாக்குதல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் முழுமையாக குணமடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.Africa News
இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை தாக்குதலின் உண்மையான பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.








Leave a Reply