Europe News, ஜெர்மனியில் குடியேறியோர் வெளியேற காரணமாக அதிகாரப்பூர்வ சிக்கல்கள், வேலை நிச்சயமின்மை மற்றும் எதிர்கால குழப்பம் முக்கியமாக இருப்பதாக IAB ஆய்வு தெரிவிக்கிறது.
ஜெர்மனியில் குடியேறிய பலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து சிந்திப்பதற்கான முக்கிய காரணங்களில் அதிகமான அதிகாரப்பூர்வ நடைமுறைகள் ஆவணச் சிக்கல்கள் வேலை மற்றும் வாழ்வாதார நிச்சயமின்மை போன்றவை இடம்பிடித்துள்ளதாக புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
ஜெர்மனியின் Institute for Employment Research (IAB) வெளியிட்ட Germany as a stopover? என்ற ஆய்வில் 2024 டிசம்பர் முதல் 2025 ஏப்ரல் வரை சுமார் 50,000 குடியேறியவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஆய்வின்படி ஜெர்மனியில் குடியேறியவர்களில் 57% பேர் நிரந்தரமாக தங்க விரும்புகின்றனர். அதேவேளை 12% பேர் தற்காலிகமாக மட்டுமே தங்க விரும்புவதாகவும் 30% பேர் தங்கள் எதிர்காலம் குறித்து இன்னும் உறுதியாக முடிவு செய்யவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 2.6 மில்லியன் பேர் அதாவது 26% குடியேறியவர்கள் கடந்த 12 மாதங்களில் ஜெர்மனியை விட்டு வெளியேறுவது பற்றி சிந்தித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இவர்களில் சுமார் 300,000 பேர் அடுத்த 12 மாதங்களில் உண்மையாகவே வெளியேற திட்டமிட்டுள்ளனர். இதில் சிலர் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்புகின்றனர் மற்றவர்கள் வேறு நாடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர்.
ஜெர்மனிக்கு தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க ஆண்டுதோறும் சுமார் 400,000 நிகர குடியேற்றம் தேவைப்படுவதாக IAB ஆய்வு குறிப்பிடுகிறது. எனவே ஏற்கனவே வந்துள்ள குடியேறியவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, ஜெர்மனியின் தொழிலாளர் சந்தை மற்றும் நீண்டகால பொருளாதாரத்துக்கு சவாலாக அமையலாம். Europe News
ஆய்வின் படி குடியேறியவர்கள் ஜெர்மனியில் தங்க விரும்பினாலும் மொழி வேலை அங்கீகாரம் குடியிருப்பு அனுமதி அலுவலக நடைமுறைகள் போன்ற சிக்கல்கள் அவர்களின் முடிவை பாதிக்கின்றன. இதனால் ஜெர்மனி திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களை நீண்டகாலம் நாட்டில் தக்கவைக்கும் கொள்கைகளையும் வலுப்படுத்த வேண்டும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.









Leave a Reply