சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அங்கிருந்த 60 கைதிகள் இன்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கடுமையான மோதல்களில் சிறைக் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறைச்சாலையையும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளையும் மையமாகக் கொண்டு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் நீர்கொழும்பு சிறையில் இருந்த கைதிகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளுக்கு கட்டம் கட்டமாக மாற்றப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக 60 கைதிகள் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதிகளின் இடமாற்றம் தொடர்பாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதுடன் சிறைச்சாலைகளில் அமைதியை நிலைநிறுத்த தேவையான மேலதிக ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்