சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சிட்னியின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல தகவல்களைக் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

அதற்கமைய, இத்தாக்குதல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் வசித்து வந்த நவீட் அக்ரம் (Naveed Akram) என்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், அவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரா அல்லது தற்போது கைது செய்யப்பட்டுள்ளவரா? என்பது குறித்துக் குறிப்பிடப்படவில்லை.

குறித்த துப்பாக்கிச் சூடு யூதர்களின் கொண்டாட்ட நிகழ்வொன்றின் மீதே நடத்தப்பட்டுள்ளது.

தற்போது இத்துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதுடன், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களில் துப்பாக்கிதாரி ஒருவரும் அடங்குகிறார்.

இரண்டு துப்பாக்கிதாரிகளால் இத்தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.

மற்றைய நபர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸ் காவலில் உள்ளார்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்